சென்னை,ஜூலை 13- சிறந்த பட்டு மற்றும் பருத்தி வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை நடப்பாண்டு முதல் உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு பின் பதில் அளித்து பேசிய அமைச்சர் ஓ.எஸ்.மணியன், புதிய அறிவிப்பு களை வெளியிட்டார். அதில், மாற்றுத் திறனாளிகள் வெவ்வேறு விதமான அமைப்புகளுடைய துணிகளை நெய்வதற்கு ஏற்ற மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி 5 லட்சத்து 56ஆயிரம் மதிப்பில் உருவாக்கப்படும் என்றார். பருத்தி மற்றும் பட்டு இரகங்களில் நவீன வடிவமைப்புகளை உருவாக்கும் நெசவாளர்களுக்கு ஊக்கத்தொகையாக முதல் மூன்று பேருக்கு 5 ஆயிரம், 3 ஆயிரம், 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவ தாகவும், இதனை உயர்த்தி 10 ஆயிரம், 6 ஆயிரம், 4 ஆயிரம் ரூபாயாக வழங்கப்படும் என அமைச்சர் ஓ.எஸ். மணியன் அறிவித்தார்.