tamilnadu

உரிமம் இல்லாமல் நாய் வளர்த்தால் ரூ.1000 அபராதம்: மாநகராட்சி முடிவு

சென்னை,மே 9- சென்னை நுங்கம்பாக்கத்தில் 2 வளர்ப்பு  நாய்கள்  ஒருசிறுமியை கடித்து குதறிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தலையின் மேல்பகுதி சதையுடன் பிய்ந்து தொங்கிய நிலையில் சிறுமிக்கு சென்னை அப்பல்லோ  மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக மேலும் 2 இடங்களி லும் நாய்கள் கடித்ததில் சிறுவர்கள் காயம் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து நாய்களை வீடுகளில் வளர்ப்பவர்கள் அதற்கான உரிய விதிமுறை களை முறையாக கடைபிடிக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். சென்னையில் வீடுகளில் நாய்களை வளர்ப்பவர்கள் மாநகராட்சியில் விண்ணப் பித்து உரிய உரிமத்தை பெற வேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு ரூ.1000 அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது. இதனை முழுமையாக கடைபிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி  அதிகாரி ஒருவர் கூறும் போது, சென்னை யில் நாய்களை வளர்க்கும் அனைவரும் உரிய உரிமம் பெற வேண்டும்.

இல்லை யென்றால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும்.  நாய் வளர்ப்பவர்களில் பெரும்பாலான வர்கள் உரிய உரிமத்தை பெறுவதில்லை. கடந்த ஆண்டு 1500 பேர் மட்டுமே உரிமம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை 300 பேர்  மட்டுமே உரிமம் கேட்டு முதலில் விண்ணப் பித்து இருந்தனர்.

நுங்கம்பாக்கத்தில் சிறுமியை நாய் கடித்த சம்பவத்துக்கு பிறகு  மூன்றே நாட்களில் 1000 பேர் விண்ணப் பித்துள்ளனர் என்றார். சென்னை மாநகராட்சியின் அதிரடி நடவடிக்கையால் சிறுமியை நாய்கள் கடித்த சம்பவம் ஏற்படுத்திய பரபரப்பு காரண மாகவும் வீடுகளில் நாய்களை வளர்ப்போர்  அச்சம் அடைந்துள்ளனர். வளர்ப்பு நாய்களை முறையாக பரா மரிக்கவும், விதி முறைகளை முறையாக கடைபிடிக்கவும் தொடங்கி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.