tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஆணையர் பெயரில் பேஸ்புக்கில்  போலியான கணக்கு

சென்னை, மே 12- சென்னை மாநக ராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் பெயரில் பேஸ்புக்கில் போலி கணக்கு தொடங்கி, பணம் கேட்டு தொந்தரவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுகுறித்து காவல் துறையில் புகார் அளிக்கப் பட்டுள்ளது. அதில், இது போன்ற நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாறவேண்டாம் என, அவர் சம்பந்தப்பட்ட ஸ்கிரீன்ஷாட்களை பதி விட்டு கோரிக்கை விடுத்துள் ளார்.

சென்னை பேருந்துகளில் ஓட்டுநர்களுக்கு மின்விசிறி

சென்னை, மே 12- பேருந்துகளில் மின்விசிறி பொருத்த மாநகர் போக்குவரத்துக் கழகம் திட்ட மிட்டுள்ளது. தமிழகத்தில் கத்திரி வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, சென்னையில் பகல் நேரங்களில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவுக்கு வெப்ப அலை வீசுகிறது. வெயிலுக்கு மத்தி யில் சாலைகளில் வாகனங்களை இயக்குவது கடும் சவாலாக உள்ளது.

இந்நிலையில் வெயில் பாதுகாப்பில் இருந்து ஓட்டுநர்களை பாதுகாக்கும் வகை யில் சென்னை மாநகர பேருந்துகளில் மின்விசிறி பொருத்த திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஓட்டுநரின் இருக்கையின் அருகே பேட்டரியால் இயங்கும் மின்விசிறி அமைக்கப்பட உள்ளது. முதற்கட்ட மாக 1,000 பேருந்துகளின் ஓட்டுநர் இருக்கை களில் பேட்டரி மின்விசிறி பொருத்த திட்ட மிடப்பட்டுள்ளதாகவும்,  தற்போது 250 பேருந்துகளில் ஓட்டுநர் இருக்கையில் மின்விசிறி பொருத்தப்பட்டுள்ளது என்றும் போக்குவரத்துக் கழகம் தெரி வித்துள்ளது.

மின்தடை:  புகார் அளிக்க உதவி எண் அறிவிப்பு
சென்னை, மே 12- மின்தடை, பழுது பிரச்ச னைக்கு  புகார் அளிக்க மின்சார ஆணையம் உதவி எண்ணை அறிவித்துள்ளது.

கடந்த மே 6ஆம் தேதி சென்னை மாநகராட்சி யில் 4,590 மெகா வாட் மின்தேவை இருந்ததாக வும், அதை எந்த தடையுமின்றி சீராக விநி யோகித்ததாகவும் மின் பகிர்மான கழகம் தெரி வித்திருந்தது.

இந்நிலையில் தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் 65 ஊழியர்கள் 3 ஷிப்டுகளாக வேலை செய்வதாகவும், இது வரை 24 லட்ச வாடிக்கை யாளர்களின் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ள தாகவும் தெரிவித்துள்ளது.

வாடிக்கையாளர்க ளுக்கு ஏதேனும் குறைகள் இருப்பின் 94987 94987 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.