tamilnadu

கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் பட்ஜெட்: கி.வீரமணி

சென்னை,பிப்.2- ஏழைகளை வஞ்சித்து, கார்ப்பரேட்டுகளை கொழுக்க வைக்கும் வகை யில் ஒன்றிய பாஜக அரசு  இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்திருப்பதாக திராவிட கழக தலைவர்  கி.வீரமணி தெரிவித்துள் ளார்.

இதுகுறித்து அவர் தெரி வித்துள்ளது வருமாறு:-

பட்ஜெட்டில் சாதி பற்றி குறிப்பிடுவது பாஜகவின் வர்ணாசிரம கொள்கையை பிரதிபலிக்கிறது. மக்க ளிடையே மாற்றம் ஏற்படு வதற்கு பதில் ஏமாற்றமே மிஞ்சியிருக்கிறது. அனை வருக்கும் அனைத்தும் தருவதாக பட்ஜெட் அமை வதே, மக்கள் நல ஆட்சிக் கான சான்றாகும். நம்பிக்கை, வளர்ச்சி, பொரு ளாதாரத்தில் முன்னேறிய, மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பட்ஜெட் இருக்க வேண்டும். மாதங்கள் பல உருண் டோடியும் தமிழ்நாட்டுக்கு மழை வெள்ள நிவாரண நிதி ஏதும் வந்தபாடில்லை.

கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை. கடந்த 10 ஆண்டுகளில் எத்தனையோ முறை சமை யல் எரிவாயு சிலிண்டரின்  விலை உயர்த்தப்பட் டுள்ளது. மேடு மேடாகி வரு கிறது; பள்ளம் பள்ளமாகிக் கொண்டே போகிறது. இதுவே, பாஜகவின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்றும் அவர் தெரி வித்துள்ளார்.