tamilnadu

வியாபாரிகளை ஏமாற்றும் பட்ஜெட்: விக்கிரமராஜா

சென்னை,பிப்.2- ஒன்றிய பாஜக அரசின் இடைக்கால பட்ஜெட் வியாபாரிகளை ஏமாற்றும் விதமாக உள்ளதாக தமிழ் நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர்  விக்கிரமராஜா தெரிவித் துள்ளார். தமிழ் மொழி காப்போம்,  தமிழ் மொழி வளர்ப்போம் என்பதை மையப்படுத்தி அனைத்து கடைகளில் பெயர் பலகையை தமிழில் வைக்க வேண்டும் என வணி கர்கள் மத்தியில் விழிப் புணர்வை ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இருசக்கர பேரணி நடைபெற்றது.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை தமிழ் நாடு வீட்டு வசதி அமைச்சர் முத்துசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அப்போது செய்தியா ளர்களை சந்தித்த தமிழ் நாடு வணிகர் சங்கங்களின்  பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா, “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகளி லும் பெயர் பலகைகளை தமிழாக்கம் செய்ய வேண் டும் என்பதை வலியுறுத் தும் விதமாக விழிப்புணர்வு  நிகழ்ச்சி ஈரோடு மாவட்டத் தில் தொடங்கியுள்ளோம். பெயர் பலகைகளை தமிழாக் கம் செய்தால் ஜிஎஸ்டி கணக்கில் சிக்கல் வராது என தமிழ்நாடு அரசு வியா பாரிகளுக்கு உறுதி அளித்துள்ளது”என்றார்.

உள்நாட்டு வணிகர்கள் அதிக அளவில் தமிழில் பெயர் பலகைகள் வைத்துள்ள நிலையில், ஆங்கிலத்தில் பெயர் வைத்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களில் தமிழில் பெயர்ப் பலகை வைக்க தமிழ்நாடு அரசு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்க  வேண்டும்.  வரும் 7ஆம் தேதி சென்னை தலைமை செயல கத்தில் அமைச்சர் சாமி நாதன் தலைமையில் அதிகாரிகளுடன் நடைபெ றும் கூட்டத்திற்கு பிறகு,  பெயர் பலகை வைப்பதற் கான காலக்கெடு நிர்ணயம் செய்யப்படும் என்றும் அவர்  தெரிவித்தார்.

ரூ. 10 லட்சம் வரை வரு மான வரி விலக்கு, ஜிஎஸ்டி  வரி விதிப்பில் மாற்றம் கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை முன்வைத்த போதும், இடைக்கால பட்ஜெட்டில் இது தொடர் பாக எந்தவித அறிவிப்பும் இல்லை. இந்த இடைக் கால பட்ெஜட் வியாபாரி களை ஏமாற்றும் பட்ெஜட் டாக உள்ளது என்றும் அவர் விமர்சித்தார்.