இன்று கன்னியாகுமரி வரும் மோடிக்கு கருப்புக்கொடி
நாகர்கோவில், மார்ச் 14- கன்னியாகுமரிக்கு இன்று (வெள்ளிக் கிழமை) வருகை தரும் பிரதமர் மோடிக்கு கருப்புக்கொடி காட் டப் போவதாக காங்கி ரஸ் அறிவித்துள்ளது.
தமிழக அரசு கேட்ட நிவாரணத் தொகை ரூபாய் 37,000 கோடியில் ஒரு சல்லிக் காசு கூட தராத நிலையில், சிறு பான்மையினரின் உரிமைகளை பறிக் கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் பிரதமர் மோடி யைக் கண்டித்து அவர் கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் பொதுக் கூட்டத்திற்கு வரும் போது சட்டமன்ற காங் கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ் குமார் தலைமையில் கருப்புக்கொடி காட்டப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
புதுவையில் திருமுருகன் அமைச்சராக பதவியேற்பு
புதுச்சேரி, மார்ச் 14- புதுவை போக்கு வரத்துத்துறை அமைச் சராக இருந்த சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து புதிய அமைச்சராக திருமுரு கன் நியமிக்கப்பட்டார். 2 முறை அவரது பதவி ஏற்பு தள்ளி வைக்கப்பட்ட நிலை யில், வியாழக்கிழமை அவர் பதவியேற் றுக் கொண்டார். ஆளுநர் மாளிகையில், தமிழிசை சவுந்தரராஜன் பதவிப்பிரமாண மும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பதவியேற்பு நிகழ்ச்சியில் முத லமைச்சர் ரங்கசாமி, பேரவை தலைவர் செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டணிக்கு வந்தால் விவசாயிகள் சின்னம்
சீமானுக்கு கர்நாடக கட்சி சலுகை
சென்னை, மார்ச் 14- கடந்த சில தேர்தல்களில் நாம் தமி ழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் தற்போது, கர்நாட கத்தைச் சேர்ந்த பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்தக் கட்சி தமிழ்நாடு - புதுச்சேரியிலும் 40 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையில் அந்தக் கட்சியின் மாநிலத் தலைவர் ஜெயக் குமார் வியாழனன்று செய்தியாளர் களுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “ சீமான் எங்களுடன் கூட்டணி அமைத் தால் அவருக்கு கரும்பு விவசாயிகள் சின் னத்தைத் தரத் தயார்” என்று ஆஃபர் அறி வித்துள்ளார்.