சென்னை, நவ.2- தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் சொந்த ஊர் செல்ல பொதுமக்கள் பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்வதில் ஆர்வமாக உள்ளனர். சென்னையில் இருந்து செல்லக்கூடிய அனைத்து ரயில் களும் நிரம்பி விட்டது. சிறப்பு ரயில்களில் இடங்கள் இல்லை. இதனால் அரசு பேருந்துகளை நாடி மக்கள் செல்கின்றனர்.
சென்னையில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக 9 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து கள் இயக்கப்படுகின்றன. இதில் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வியாழக்கிழமை (நவ.2) காலை நிலவரப்படி 90 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள் ளனர். இதில் சென்னையில் இருந்து மட்டும் 60 ஆயிரம் பேர் செல்ல முன்பதிவு செய்தனர்.
பெரும்பாலானவர்கள் 10 ஆம் தேதி பயணம் செய்கின்ற னர். அதனால் தீபாவளிக்கு முந்தைய வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை பயணம் செய்ய தென் மாவட்ட பேருந்து களில் இடமில்லை. 9 மற்றும் 11 ஆம் தேதி பயணிக்க இடங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித் துள்ளனர்.