6ஆவது ஊதியக்குழு ஊதியம் சிறப்பு உயர்வுத் தொகை, நிலுவைத் தொகைகளை கணக்கிட்டு உடனடியாக வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஊதிய அரசாணை 62ஐ மறுபரிசீலனை செய்யும் முடிவை அரசு கைவிட வேண்டும், 1.10.2017 முதல் ஓய்வு பெற்ற துப்புரவு தொழிலாளர்களுக்கு அரசாணையின்படி பணிக்கொடையாக ரூ. 50,000, ஓய்வூதிய மாக மாதம் ரூ. 2,000 வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியர் மற்றும் துப்புரவு தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவர் காசி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாவட்டச் செயலாளர் என் காசிநாதன், ஊரக வளர்ச்சி உள்ளாட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் யோபு, வட்ட நிர்வாகிகள் முனுசாமி, அசோகன், வெங்கடேசன், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.