சென்னை,பிப்.23- தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உயரிய ஊக்கத் தொகை வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் இளை ஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஊக்கத்தொகையை வழங்கினார்.
கோவாவில் 37-வது தேசிய விளையாட்டு போட்டி, தமிழ்நாட்டில் நடைபெற்ற கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி, ஜெர்மனியில் 8-வது உலக அளவில் குள்ள மனிதர்களுக்கான விளை யாட்டு போட்டி, தாய்லாந்தில் உலக திறன் விளையாட்டு போட்டி, தில்லியில் மாற்றுத்திறனாளி களுக்கான கேலோ இந்தியா விளை யாட்டுப் போட்டி, பன்னாட்டு அளவில் பில்லியர்ட்ஸ் போட்டி, ஆசிய சைக்கிள் போட்டி, பல்வேறு மாநி லங்களில் தேசிய நீச்சல் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற 601 வீரர் மற்றும் வீராங்கனை களுக்கு ரூ.16.31 கோடி மதிப்பில் உயரிய ஊக்கத் தொகைக்கான காசோலைகளை வழங்கினார்.
சிறந்த விளையாட்டு வீரர் களுக்கு அரசு துறைகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் 3 விழுக்காடு வேலைவாய்ப்பு ஒதுக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் கால்பந்து வீராங்கனை எஸ். ரங்கநாயகி, வீல்சேர் பென்சிங் வீராங்கனை ஆர்.சங்கீதா மற்றும் வீராங்கனைகள் பி.அகல்யா, ஆர்.வெர்ஜின் ஆகியோ ருக்கு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறையில் இளநிலை உதவியாளராக அரசுப் பணி ஆணை வழங்கப்பட்டது.