சென்னை,பிப்.3- சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனை யில் சிகிச்சை பெற்று வந்த வண்ணாரப்பேட்டை பகுதியை சேர்ந்த தனசேகர் (57) மூளைச்சாவு அடைந் தார். இதையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டன. இந்த நிலையில், மருத்து வம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச் சர் மா.சுப்பிரமணியன், தனசேகர் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வில், ஐட்ரீம் மூர்த்தி எம்.எல்.ஏ., தமிழ் நாடு உறுப்பு மாற்று ஆணை யத்தின் உறுப்பினர் செய லாளர் கோபாலகிருஷ்ணன், ஸ்டான்லி அரசு மருத்துவ மனை துணை முதல்வர் ஜென்னத் சுகுந்தா மற்றும் பலர் உடனிருந்தனர். இதுகுறித்து, அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் உடல் உறுப்பு தானம் செய்பவர்க ளுக்கு அரசு மரியாதை செய்யப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். இந்த அறிவிப்பு வெளியிடப்பட்ட 3 மாதத்தில் 61 பேர் மூளைச் சாவு அடைந்த பிறகு அவரது குடும்பத்தினர் விருப்பத்தின் பேரில் உடலுறுப்பு தானம் பெறப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு 156 பேர் உடல் உறுப்பு தானம் செய்தார்கள். முதலமைச்சரின் அறிவிப் புக்கு முன்பு 117 பேர் என மொத்தம் 178 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள் ளார்கள்.
எனவே, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டு உடல் உறுப்பு தானம் செய்தவர்களின் எண்ணிக்கை 11.4 விழுக் காடு அதிகரித்துள்ளது. அதேபோல, 4 ஆயிரத்து 97 பேர் தங்களுடைய மறை வுக்கு பின்னால் உடலுறுப்பு தானம் செய்வோம் என்று பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆண்டு இதுவரை 32 பேர் உடல் உறுப்பு தானம் செய்துள்ளனர். ஒருபுறம் உடலுறுப்பு தானம் செய்து வரும் நிலை யில் உடல் உறுப்பு வேண்டி காத்திருப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.
அதன்படி, 6 ஆயிரத்து 939 பேர் உடல் உறுப்பு தானம் வேண்டி காத்திருக்கிறார்கள். அதிகபட்சமாக, சிறுநீரகம் வேண்டி 6 ஆயிரத்து 266 பேர் காத்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு 178 உடல் உறுப்புகள் தானமாக பெறப் பட்டு ஆயிரம் பேர் பயன் பெற்றுள்ளார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.