tamilnadu

img

போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு!

போக்குவரத்து ஊழியர்களுக்கு 6 விழுக்காடு ஊதிய உயர்வு! 

சிஐடியு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஏற்க மறுப்பு

சென்னை, மே 29 - போக்குவரத்து ஊழியர் 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. சிஐடியு  உள்ளிட்ட 30க்கும் அதிக மான சங்கங்கள் கையெழுத் திடவில்லை.. போக்குவரத்து தொழி லாளர்களின் 15வது  புதிய ஒப்பந்தம் 1.9.2023 தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். தொழிற்சங்கங்களின்போராட்டத்தையடுத்து 2024ஆம் ஆண்டு ஆகஸ்ட் 27ந் தேதி முதற்கட்ட பேச்சுவார்த்தையையும், கடந்த பிப்ரவரி 13-14ந் தேதிகளில் இரண்டாம் கட்ட  பேச்சுவார்த்தையையும் நடத்தியது. அதன்பிறகு பேச்சு வார்த்தை நடத்தாத நிலை யில் மே 27 அன்று 12 மணி  நேர உண்ணா நிலை போராட் டத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எஸ் ஆகிய சங்கங் கள் அழைப்பு விடுத்தன. இத னையடுத்து மே 29அன்று ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தது. இதன்படி போக்கு வரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலை மையில்  வியாழனன்று ( மே 29) குரோம்பேட்டையில் உள்ள மாநகர போக்கு வரத்து கழக பயிற்சி மையத் தில் நடைபெற்றது. துறைச் செயலாளர் பனீந்தர்ரெட்டி, மாநகர போக்குவரத்து கழக் மேலாண்மை இயக்குநர் பிரபுசங்கர், உள்ளிட்டு 8 போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள், தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர், தொமுச, சிஐடியு உள்ளிட்ட  85 சங்கங்களின் பிரதி நிதிகள் கலந்து கொண்ட னர். இந்த பேச்சுவார்த் தையில் ஒப்பந்தம் கையெ ழுத்தானது. பேச்சுவார்த்தை யில் இருந்து வெளியெறிய பின்னர் அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: 4 ஆண்டுக்கான 15வது ஊதிய ஒப்பந்தம், 1.9.2023 முதல் ஊதிய ஒப்பந் தம் அமலாகும். அடிப்படை சம்பளத்தில் 6 விழுக்காடு ஊதிய உயர்வு வழங்கப் படும். ஆனால் 1.9.2024 முதல் நிலுவைத்தொகை வழங்கப் படும் என்று தெரிவிக்கப் பட்டது. அதனை ஏற்க மறுத்து சிஐடியு, ஏஐடியுசி, டிடிஎஸ்எப் உள்ளிட்ட சங்கங்கள் கையழுத்தி டாமல் வெளிநடப்பு செய்து ள்ளோம்.  ஓராண்டு நிலுவைத் தொகை இழப்பால் தொழி லாளர்களுக்கு சுமார் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட் டுள்ளது. ஓய்வூதியர்க ளுக்கு நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள அக விலைப்படியை வழங்க கோரினோம். அதற்கு திருப்திகரமான பதில் தர வில்லை. ஒப்பந்தத்தின் பலன் ஓய்வூதியர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆனால் கடந்த 4 ஒப்பந்தங்களில் ஓய்வூதியர்கள் புறக்க ணிக்கப்பட்டு வருகின்றனர். ஓய்வுபெறும் தொழிலா ளர்கள் கடந்த 22 மாதங்க ளாக ஓய்வூக்கால பணப் பலன்களை பெறாமல் வெறும் கையொடு செல் கின்றனர். அந்த தொகையை வழங்குவதற்கான கால நிர்ணயம் செய்ய கோரி னோம். அதற்கு பதிலளிக் கவில்லை; ஒப்பந்தத்தில் சேர்க்கவில்லை.  அரசு துறை ஊழியர் களை விட போக்குவரத்து ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக உள்ளது. போக்கு வரத்து ஊழியர்களில் ஜூனி யர்களை விட சீனியர்க ளுக்கு ஊதியம் குறைவாக உள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டை சரி செய்ய வில்லை. மேலும், பிறத்துறை ஊழி யர்களைவிட குறைவாக ஊதியம் வழங்குவதை சரி செய்ய சிறப்பு ஊதியமாக ரூ.2000 வழங்க வேண்டும். அதற்கு மேல் 15  சதவீதம் ஊதிய உயர்வு  தர வேண்டும் என்று கோரி னோம். இதனை விவாதிக்க கூட அரசு தயாராக இல்லை.  இத்தகைய பிரச்சனைகளில் உடன்பாடு ஏற்படாததால் ஒப்பந்தத்தில் கையெழுத் திடாமல் வெளிநடப்பு செய்து ள்ளோம். அடுத்தகட்ட நட வடிக்கை குறித்து விவா தித்து அறிவிப்போம். இவ்வாறு அவர் கூறி னார்.