எம்.சி.சி.கல்லூரில் பணி யாற்றிய கடைநிலை ஊழியர்கள் 80 பேருக்கு ஏரி புறம்போக்கு நிலத்தில் 1970ம் ஆண்டு அப்போதைய சட்ட மன்ற உறுப்பினர் முனு ஆதி, கல்லூரி முதல்வர் சந்திரன் தேவ நேசனும் இணைந்து தலா ஒரு கிரவுண்ட் நிலம் வழங்கினர். இதன் காரண மாக அந்த இடத்திற்கு மக்கள் தேவநேசன் நகர் என்று பெயர் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக ஸ்ரீராம் நகர், காமராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகள் உருவாகின. தற்போது தாம்பரம் மாநகராட்சியின் 61வது வார்டில் இந்த பகுதிகள் உள்ளன. “இந்த பகுதியில் 50 வருடங்களாக மக்கள் வாழ்கின்றனர். ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும், ரவுடிகளும், அதிகாரிக ளும் சேர்ந்துதான் மக்களுக்கு நிலத்தை விற்றார்கள். காசு கொடுத்து வாங்கிதான் மக்கள் குடியேறினார்கள். தற்போது 7 ஆயிரம் வீடுக ளுக்கு மேல் உள்ளது. ஒவ்வொரு குடும்பமும் 4வது தலை முறையை கண்டுள்ளது. அனைத்து அடிப்படை வசதிக ளும் செய்து கொடுக்கப் பட்டுள்ளது. இந்த நிலையில் குடியிருப்போருக்கு பட்டா வழங்குவதுதானே நியாயம்?” என்று 40 வருடமாக வசித்து வரும் ஜோதி கேட்கிறார். “சர்வே எண் 183/1ல் உள்ள ஸ்ரீராம் நகரின் ஒருபகுதி மக்களுக்கு பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், தேவநேசன் நகர் உள்ளிட்ட பகுதி மக்களுக்குதராமல் உள்ளனர். 1990ம் வருடம் பிரதமர் ராஜீவ்காந்தி மறைமலை நகர் சென்றபோது, ஜிஎஸ்டி சாலையோரம் வசித்த மக்களை வேலுநகரில் மறு குடிய மர்வு செய்தனர். அந்த பகுதியை குடிசைமாற்று வாரியம் நிலமாக வகைப்படுத்தினர். அங்குள்ளவர்க ளுக்கும் பட்டா தர மறுக்கின்றனர்.” என்றும் அவர் தெரிவிக்கிறார்.