tamilnadu

img

மின்சார பேருந்து தனியார்மயத்தை எதிர்த்து 5 நாள் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நிறைவு

​​​​​​மின்சார பேருந்து தனியார்மயத்தை எதிர்த்து 5 நாள் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நிறைவு

சென்னை, மே 16 - மின்சார பேருந்துகளை (இ-பஸ்) தனி யார்மயமாக்கும் மாநில அரசின் நட வடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து 5 நாட்கள் நடைபெற்ற பிரச்சாரம் வெள்ளியன்று (மே 16) நிறைவடைந்தது. உலக வங்கி நிதி உதவியோடு தமிழ்நாடு அரசு 1000 மின்சார பேருந்து களை கொள்முதல் செய்துள்ளது. முதற் கட்டமாக ஜூன் முதல் 650 மின்சாரப் பேருந்து கள் (ஏசி/நான் ஏசி) வியாசர்பாடி, தண்டை யார்பேட்டை, பூந்தமல்லி, மத்திய பணி மனை, பெரும்பாக்கம் ஆகிய பணிமனை களில் இருந்து இயக்கப்பட உள்ளது. இந்த பேருந்துகளை தனியார் நிறுவனம் மூலம் இயக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர், பராமரிப்பாளர் உள்ளிட்ட ஊழியர்களை தனியார் நிறுவனம் நியமித்துக்  கொள்ளும். ஒப்பந்த தொழிலாளியாக நடத்து நரை மட்டும் அரசு நியமிக்கும். மின்சார பேருந்துகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட குறைவாக வசூல் வந்தால், நட்டத்தை அரசு ஈடுகட்டும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. எனவே, மின்சார பேருந்துகளை தனி யார்மயமாக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மே 11 முதல் சிஐடியு, அரசாங்க  போக்குவரத்து ஊழியர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாண வர் சங்கம் ஆகிய அமைப்புகள் மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. சென்னை நகரம் முழுவதும் நடைபெற்ற மக்கள் சந்திப்பு இயக்கத்தின் நிறைவாக ஆங்காங்கே பிரச்சார கூட்டங்கள் நடை பெற்றன. மின்சார பேருந்துகளை மாநகர போக்குவரத்து கழகமே இயக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரந்தர பணி அடிப் படையில் 69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப் படையில் நிரப்ப வேண்டும். இ-பேருந்து சேவையில் ஒப்பந்த முறை, தனியார் மயத்தை கைவிட வேண்டும், போக்கு வரத்து கழகங்கள் அரசு துறையாக நீடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என தலைவர்கள் வலியுறுத்தினர்.