சென்னை, மே 13- ரூ.4 கோடி பணம் கடத்தப்பட்ட வழக்கில், பாஜக மாநிலத் துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன் வச மாகச் சிக்கும் நிலை ஏற்பட்டுள் ளது. தாம்பரம் ரயில் நிலையத்தில் ஏப்ரல் 6 அன்று பிடிபட்ட ரூ. 4 கோடி பணம், நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திர னுக்குச் சொந்தமானது என்று குற் றச்சாட்டு எழுந்தது. தாம்பரம் போலீ சாரிடம் பிடிபட்ட சதீஸ், நவீன், பெரு மாள் ஆகியோர் இதுதொடர்பாக வாக்குமூலம் அளித்திருந்தனர்.
மேலும், இவர்கள் நயினார் நாகேந் திரனுக்கு சொந்தமான சென்னை புரசைவாக்கத்தில் உள்ள ஹோட் டலில் பணியாற்றும் ஊழியர்கள் என்பது தெரியவந்தது. அதன்பேரில் நயினார் நாகேந்தி ரன் மீது தாம்பரம் போலீசார் வழக் குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக் கம் அளிக்குமாறு சம்மனும் அனுப் பினர். ஆனால் நயினார் நாகேந்தி ரன் விசாரணைக்கு ஆஜராக வில்லை. 10 நாட்கள் அவகாசம் கேட்டார். இதைத்தொடர்ந்து மே 2 அன்று ஆஜராக வேண்டும் என்று அவருக்கு மீண்டும் சம்மன் அனுப் பப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு சிபிசிஐடி போலீசார் விசார ணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. அவர்கள் தாம்பரம் போலீசார் அளித்த ஆவணங்களின் அடிப்ப டையில் 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். வழக்கில் இது வரை 15-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் போலீஸ் விசாரணையில் புதிய தக வல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது, இந்த வழக்கு தொடர் பாக கைதானவர்கள் பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் பரிந்து ரையின் பேரில் ரயிலில் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. அதா வது, எம்எல்ஏ என்ற அடிப்படை யில், நயினார் நாகேந்திரனுக்கு ரயில்வே வழங்கும் எமர்ஜென்சி கோட்டா டிக்கெட்டில் தான் இவர் கள் ரயிலில் பயணித்தது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 4 கோடியை கடத்தி வந்த வழக்கில், பாஜக மாநில துணைத்தலைவரும், எம்எல்ஏ-வுமான நயினார் நாகேந்தி ரன் வசமாகச் சிக்கும் நிலை உரு வாகியுள்ளது.