செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் 3வது கட்ட கலந்தாய்வு
சென்னை, ஜூன் 22- செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கட்ட , இரண்டாம் கட்டக் கலந்தாய்வுகள் நடந்து முடிந்துள்ளன. இதுவரை 109 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். எஞ்சிய 161 இடங்களுக்கு மூன்றாம் கட்ட கலந்தாய்வு திங்கட்கிழமை (ஜூன் 23) தொடங்கி ஜூன் 27 வரை நடைபெற உள்ளது. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் இந்த மூன்றாம் கட்டக் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். முதலில் வருவோருக்கே முதல் வாய்ப்பு என்னும் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். எனவே, இளம் கணினி அறிவியல், இளங்கலை வணிகவியல், இளங்கலை வணிக நிர்வாகவியல், இளங்கலை வரலாறு, இளங்கலை அரசியல் அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் விண்ணப்பப் படிவம் உள்ளிட்ட அனைத்துச் சான்றிதழ்களின் அசல்களையும் நகல்களையும் கலந்தாய்வுக்கு வருகிறபோது கொண்டு வர வேண்டும். மாணவர்களின் மதிப்பெண் தரவரிசைப்படி மாணவர்கள் சேர்க்கை பெறலாம் என்று முதல்வர் சு.மாதவன் கூறியுள்ளார்.
கலவையில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்
ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்தும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக்கிழமை (ஜூன் 21) கலவையில் மக்கள் சந்திப்பு கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. தாலுகா குழு உறுப்பினர் இ. ராஜா தலைமையில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் பி. ரகுபதி, தாலுகா குழு செயலாளர் எஸ். கிட்டு, தாலுகா குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், ரவி, செந்தில், சேட்டு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.