சென்னை, ஜூலை 13- கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க அங்கீக ரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து 39 மருத்துவமனைகள் நீக் கப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மறுத்த சர்ச்சையை தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரி விக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் கொரோனா தொற்றானது அதிகரித்து வருகிறது. எனவே, அரசு மருத்துவமனைகள் மட்டு மின்றி, 230 தனியார் மருத்துவ மனைகளுக்கு சிகிச்சை அளிக்க சுகாதாரத்துறை அனுமதி அளித்தது. இவ் வாறு அங்கீகரிக்கப்பட்ட தனி யார் மருத்துவமனைகளில் எத்தனை படுக்கைகள் காலி யாக உள்ளன? பயன்பாட்டில் உள்ளன? என பல விவரங்கள் சுகாதாரத்துறை சார்பில் இணையத்தில் வெளியிடப் பட்டு வருகிறது. அதனை காணும் கொரோனா நோயா ளிகள் மருத்துவமனை களுக்கு சென்றால் அங்கு அனுமதிக்கப்படுவதில்லை என குற்றசாட்டு எழுந்தது. இதுதொடர்பாக சம் மந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரிடம் கேட்டபோது, அரசின் பட்டியலில் தங்க ளின் மருத்துவமனை இடம் பெற்றிருப்பதே எங்களுக்கு தெரியாது என கூறியுள்ள னர். இதனால் கொரோனா நோயாளிகள் அலைகழிக்கப் பட்டனர். இதுதொடர்பான சர்ச்சைகள் காரணமாக 39 தனியார் மருத்துவமனை களை அங்கீகரிக்கப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கப் பட்டுள்ளது.