tamilnadu

img

அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்கு எதிரான வாக்குகளை ஒருங்கிணைப்போம்!

சென்னை, டிச. 16 - மூன்று மாநிலத் தேர்தல் ஒரு  படிப்பினை என்றும், 2024 நாடாளு மன்றத் தேர்தலில், பாஜக-வுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி மேற்கொள்ளும் என்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறி யுள்ளார்.

‘தி இந்து’ ஆங்கில நாளித ழுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின்  நேர்காணல் ஒன்றை வழங்கியுள் ளார். அதில், “மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக நாடாளு மன்றத் தேர்தலில் வெற்றி பெறு வதைத் தடுக்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளதே; இச்சூழலில் ‘இந்தியா’ கூட்டணி யின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நம்புகிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

“5 மாநிலத் தேர்தல் முடிவுகள்  2024 தேர்தலில் எதிரொலிக்காது”
அதற்குப் பதிலளித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், “மூன்று  மாநிலத் தேர்தல் முடிவுகள் என்பவை சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்தான். இது நாடாளு மன்றத் தேர்தல் முடிவைப் பாதிக் காது. பொதுவாகச் சட்டமன்றத் தேர்தலின் போது மாநிலப் பிரச்ச னைகள்தான் தலைதூக்கிக் காணப்படும். அவைதான் இத்த கைய முடிவுக்குக் காரணம் ஆகும். ராஜஸ்தான் மாநிலத்தில் பாஜக வென்றிருந்தாலும், காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்குமான வாக்கு வித்தியாசம் 10 லட்சம் தான். சத்தீஸ்கரில் 6 லட்சம் வாக்குகள்தான் பாஜக அதிகம் பெற்றுள்ளது. மத்தியப்பிரதேசத் சத்தில் மட்டும்தான் 35 லட்சம் வாக்குகளைக் கூடுதலாக பாஜக பெற்றுள்ளது.

பா.ஜ.க.வுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல், ஒருமுகப் பட்டிருக்குமானால் இந்த மூன்று மாநில வெற்றியை பாஜக பெற்றி ருக்க முடியாது என்பதே உண்மை.  நடைபெற இருக்கும் நாடாளு மன்றத் தேர்தலில் பாஜக-வுக்கு  எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை ‘இந்தியா’ கூட்டணி செய்யும். அதன் மூல மாக நாடாளுமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றியை நாங்கள் பெறுவோம். மூன்று மாநி லத் தேர்தல் முடிவைப் படிப்பினை யாகவே நாங்கள் பார்க்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

ஆளுநர் சிலரின் கைப்பாவையாக செயல்படுவதுதான் பிரச்சனை
“முதல்வராகிய நீங்களும் ஆளுநரும் கலந்து பேசி, நிர்வா கத்தில் இருக்கும் முட்டுக்கட்டை களைப் போக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருக் கிறது. ஆளுநர் உங்களை அழைத் திருக்கிறார். அரசு நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை இது களையும் என்று நம்புகிறீர்களா?” என்ற மற்றொரு கேள்விக்கு, “ஆளுநர் தமிழ்நாட்டிற்கு வந்த பிறகு பலமுறை அவரை நான் சந்தித்து இருக்கிறேன். பேசி இருக்கிறேன். அரசு விழாக்களி லும் பல முறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார், பேசினார். எனவே, நாங்கள் இரு வரும் சந்திப்பது அல்ல பிரச்ச னை. ஆளுநர் மனம் மாறித் தமிழ்நாட் டின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு. தமிழ்நாட்டு மக்க ளுக்கும், சிந்தனைக்கும், வளர்ச்சி க்கும் எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக அவர் செயல் படுவதைத் தவிர்த்து, தமிழ்நாட் டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்” எனவும்  முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.