அம்பத்தூர், ஜூன் 20- ஒன்றிய பாஜக அரசு கொண்டு வரும் புதிய 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து பூந்தமல்லியில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்து, தமிழ்நாடு புதுச்சேரி வழக்கறி ஞர்கள் கூட்டமைப்பு சார்பில் பூந்தமல்லி நீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
கூட்டமைப்புத் தலைவர் ஏகாம்பரம் தலைமை தாங்கினார். செய லாளர் கவுதமன் கோபு முன்னிலை வகித்தார். இதில் 100-க்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு புதிதாக கொண்டு வரப்படவுள்ள 3 குற்றவியல் சட்டங்களை கண்டித்தும், திரும்பப் பெற வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர். நிகழ்வில் மண்டல செயலாளர் பாலமுருகன், துணைத் தலைவர் ஜேம்ஸ், இணைச்செயலர் சசிகுமார், பொருளாளர் ஆனந்த்பாபு மற்றும் நிர்வாகிகள் ஆதிசேஷன், சக்கரவர்த்தி, சதீஷ்குமார், கோபிநாதன், நம்பி, கங்கா, செழியன், முரளி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.