tamilnadu

2ஆம் வகுப்பு பாடத்தை தாய்மொழியில் சரளமாக படிக்க முடியாத மாணவர்கள்

சென்னை, ஜன. 21- நாட்டில் 14 முதல் 18  வயது வரையிலான மாண வர்களில், 25 விழுக்காடு பேருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை கூட, தங்கள் தாய் மொழியில் சரளமாக படிக்க முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அசெர் என்ற அமைப்பு, 4 ஆண்டுகள் ஆய்வு செய்து அந்த தரவுகள் அடிப் படையில், கல்வி நிலை  அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகை யில் 2018ஆம் ஆண்டு முதல்  2022ஆம் ஆண்டு வரை யிலான 4 ஆண்டுகளில் அசெர் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

இந்தியா முழுவதும் 616 மாவட்டங்களில் உள்ள 19 ஆயிரத்து 60 கிராமங்களில், 6 லட்சத்து 99 ஆயிரத்து 597 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 27  ஆயிரத்து 536 தன்னார் வலர்கள் மூலமாக இந்த  ஆய்வு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது. இந்த ஆய்வில், நாட்டில்  உள்ள 14 முதல் 18 வயது  வரையிலான இளைஞர் களில் 25 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை அவர்களின் தாய்மொழியில் சரளமாக படிக்க இயலமுடியாத நிலை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களால் 3ஆம் வகுப்பு கணித கேள்வியை தீர்க்க முடிய வில்லை என்றும், அதோடு 42.7 சதவீதம் பேரால் ஆங்கிலத்தில் வாக்கியங் களை படிக்க முடியவில்லை என்பதும், அப்படியே ஆங்கில வாக்கியங்களை படிப்பவர்களில் 4இல்  ஒருவருக்கு அர்த்தம் புரிய வில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 14 வயது முதல் 18  வயது வரையிலான மாண வர்களில், பாதிக்கும் மேற் பட்டவர்களால் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் கற்பிக் கப்படும் எளிமையான மூன்று இலக்க கணித சிக்கலை கூட தீர்க்க முடிய வில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது. இந்த ஆய்வு முடிவு குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில்,  6.99 லட்சம் பேரிடம் அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார்கள். இது மிக மிக குறைவான எண் ணிக்கை. இந்த எண்ணிக் கையை வைத்து நாம் எந்த ஒரு கருத்தையும் கூற முடியாது. ஆனால் கல்வியின் தரம் நாடு முழுவதும் மிக  மோசமான நிலைக்கு சென்று  கொண்டுள்ளது.

சிலைக்கோ, கோயிலுக்கோ கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நிச்சயமாக கல்விக்கு கொடுப்பதில்லை என்றார்.சென்னை, ஜன. 21- நாட்டில் 14 முதல் 18  வயது வரையிலான மாண வர்களில், 25 விழுக்காடு பேருக்கு 2ஆம் வகுப்பு பாடத்தை கூட, தங்கள் தாய் மொழியில் சரளமாக படிக்க முடியவில்லை என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அசெர் என்ற அமைப்பு, 4 ஆண்டுகள் ஆய்வு செய்து அந்த தரவுகள் அடிப் படையில், கல்வி நிலை  அறிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகை யில் 2018ஆம் ஆண்டு முதல்  2022ஆம் ஆண்டு வரை யிலான 4 ஆண்டுகளில் அசெர் அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தியா முழுவதும் 616 மாவட்டங்களில் உள்ள 19 ஆயிரத்து 60 கிராமங்களில், 6 லட்சத்து 99 ஆயிரத்து 597 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. 27  ஆயிரத்து 536 தன்னார் வலர்கள் மூலமாக இந்த  ஆய்வு பணி மேற்கொள்ளப் பட்டுள்ளது.

இந்த ஆய்வில், நாட்டில்  உள்ள 14 முதல் 18 வயது  வரையிலான இளைஞர் களில் 25 சதவீதம் பேருக்கு இரண்டாம் வகுப்பு பாடங்களை அவர்களின் தாய்மொழியில் சரளமாக படிக்க இயலமுடியாத நிலை இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் இவர்களால் 3ஆம் வகுப்பு கணித கேள்வியை தீர்க்க முடிய வில்லை என்றும், அதோடு 42.7 சதவீதம் பேரால் ஆங்கிலத்தில் வாக்கியங் களை படிக்க முடியவில்லை என்பதும், அப்படியே ஆங்கில வாக்கியங்களை படிப்பவர்களில் 4இல்  ஒருவருக்கு அர்த்தம் புரிய வில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. கிராமப்புற பகுதியைச் சேர்ந்த 14 வயது முதல் 18  வயது வரையிலான மாண வர்களில், பாதிக்கும் மேற் பட்டவர்களால் 3 மற்றும் 4ஆம் வகுப்புகளில் கற்பிக் கப்படும் எளிமையான மூன்று இலக்க கணித சிக்கலை கூட தீர்க்க முடிய வில்லை என்ற அதிர்ச்சித் தகவல் கிடைத்துள்ளது

. இந்த ஆய்வு முடிவு குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில்,  6.99 லட்சம் பேரிடம் அவர்கள் ஆய்வு நடத்தியுள்ளார்கள். இது மிக மிக குறைவான எண் ணிக்கை. இந்த எண்ணிக் கையை வைத்து நாம் எந்த ஒரு கருத்தையும் கூற முடியாது. ஆனால் கல்வியின் தரம் நாடு முழுவதும் மிக  மோசமான நிலைக்கு சென்று  கொண்டுள்ளது. சிலைக்கோ, கோயிலுக்கோ கொடுக்கும் முக்கியத்துவத்தை நாம் நிச்சயமாக கல்விக்கு கொடுப்பதில்லை என்றார்.