tamilnadu

img

பள்ளிகளில் 28 வகையான சாதிய பாகுபாடு இருப்பது தெரியவந்தது

‘பள்ளிகளில் நிலவும் சாதிப் பாகுபாடுகள்’ குறித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாட்டின் 36 மாவட்டங்களில் உள்ள 441 பள்ளிகளில் பயிலும் 644 மாணவர்களிடம் கள ஆய்வு நடத்தியது. இதில், பள்ளிகளில் 28 வகையான சாதிய பாகுபாடு இருப்பது தெரியவந்தது. இந்த ஆய்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியிடம் வியாழனன்று (டிச.28) முன்னணியின் பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ் வழங்கினார். முன்னணியின் பொருளாளர் மோகனா, துணைப் பொதுச் செயலாளர் கே.சுவாமிநாதன், வடசென்னை மாவட்டத் தலைவர் ராஜ்குமார், செயலாளர் ஜானகிராமன், தென்சென்னை மாவட்டப் பொருளாளர் பி.ஆர்.முரளி ஆகியோர் உடனிருந்தனர்.