திருவண்ணாமலை, நவ. 26- பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீப விழா, ஞாயிற்றுக்கிழமை (நவ. 26)நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான தீபவிழா, நவம்பர் 17 அன்று தொடங்கியது.
தினமும் மாடவீதிகளில் உற்ச வங்கள் நடைபெற்றது. 6 வது நாளான புதன்கிழமை (நவ.22) இரவு 115 ஆண்டு கள் பழமையான வெள்ளித் தேரோட் டம், 7 வது நாளான வியாழக்கிழமை (நவ. 23) மகாரத தேரோட்டம் நடை பெற்றது.
தீப விழாவின் 10 வது நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ. 26) காலை கோவிலில் பரணி தீபம், மாலையில் 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீப விழாவில் சுமார் 25 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.