tamilnadu

img

தமிழகத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதி - தமிழக அரசு!

தமிழகத்தில் 25 வட்டாரங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில், மழை குறைவாக பெய்த, 33 சதவீதத்துக்கும் மேற்பட்ட பயிர்ச்சேதம் ஏற்பட்ட 6 மாவட்டங்களில் 25 வட்டாரங்களை தமிழக அரசு மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவித்து, அரசாணை வெளிடயிப்பட்டுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில் வடகிழக்குப் பருவமழையின் போது குறைந்த மழைப்பொழிவு இருந்த பகுதிகள், மிதமான வேளாண் வறட்சிப் பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில், புதுக்கோட்டை - ஆவுடையார்கோயில், மணல்மேல்குடி; சிவகங்கை - தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார்கோவில்; ராமநாதபுரம் - போகலூர், கடலாடி, திருவாடானை, ராமநாதபுரம், நயினார் கோயில், திருப்புல்லானி, ஆர்.எஸ்.புரம், மண்டபம், முதுகுளத்தூர், கமுதி, பரமக்குடி; தென்காசி - ஆலங்குளம், கடையநல்லூர், கீழ்ப்பாவூர், மேலநீலிதநல்லூர், சங்கரன்கோவில்; தூத்துக்குடி - ஆள்வார்திருநகரி; விருதநகர் - நரிக்குடி, திருச்சுழி ஆகிய 25 வட்டாரங்கள், மிதமான வேளாண் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கபட்டுள்ளது.

;