சென்னை
நாட்டின் வளர்ச்சி அடைந்த மாநிலங்களில் ஒன்றான தமிழகத்தில் கொரோனா பரவல் மின்னல் வேகத்தில் உள்ளது. இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 174 பேருக்குக் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அங்குப் பாதிப்பு எண்ணிக்கை 1257 ஆக உயர்ந்துள்ளது. சென்னைக்கு அடுத்த படியாக அரியலூரில் 18 பேரும், காஞ்சிபுரத்தில் 13 பேரும், திருவள்ளூரில் 7 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் இன்று கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 1341 ஆக உயர்ந்துள்ளது.