tamilnadu

img

ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற இளைஞர் தற்கொலை

ஆன்லைன் செயலியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது வசந்த என்ற இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் என்பவரின் மகன் வசந்த (22 வயது). இவர் செங்கல்பட்டு மாவட்டம் பள்ளியகரம் அருகே தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் திடீரென தனது விடுதி அரையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து போலீசார், வசந்தின் உடலை கைப்பற்றிய உடல்கூராய்வுக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ஆன்லைன் செயலியில் பெற்ற கடனை திருப்பி செலுத்த முடியாததால் ஏற்பட்ட மன உளைச்சலில் இருந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து போலீசார் அடுத்தகட்ட விசாரணை நடத்தி வருகின்றனர்.