மாமேதை கார்ல் மார்க்சின் 206 வது பிறந்தநாள் ஞாயிறன்று (மே 5) தென்சென்னை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் செங்கொடியேற்றி, மக்களுக்கு இனிப்பு குளிர்பானங்கள் வழங்கி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஆலந்தூர் பகுதி நங்கநல்லூர் கிளை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன் கலந்துகொண்டு மார்க்சின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.அரிகிருஷ்ணன், பகுதிச்செயலாளர் என்.வெங்கடேசன், பகுதிக்குழு உறுப்பினர் முரளி, கிளைச் செயலாளர் பாரதி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக் குழுவின் மாவட்டத் தலைவர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.