தென்சென்னை மாவட்டத்தில் 200 குழுக்கள் கிளர்ச்சி பிரச்சாரம்
சென்னை, ஜூன் 19 - தென்சென்னை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 200க்கும் மேற்பட்ட குழுக்கள் கிளர்ச்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. மக்கள் நலக் கோரிக்கைகளை வலி யுறுத்தி ஒன்றிய, மாநில அரசுகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 நாள் கிளர்ச்சி பிரச்சாரத்தை ஜூன் 11 அன்று தொடங்கியது. நகரங்களில் வீதிவீதியாக சென்று மக்களிடம் துண்டறிக்கைகளை கொடுத்து உரையாடும் வகையில் இந்த பிரச்சாரம் நடைபெற்றது. ஒன்றிய அரசின் தவறான வெளியுறவு, பொருளாதார கொள்கை, தனியார் மயமாக்கல், விலை வாசி உயர்வு, வேலை யின்மை, வெறுப்பு பிரச் சாரம், தமிழக உரிமை பறிப்பு, ஒன்றிய முகமை களை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை பழி வாங்குவது உள்ளிட்ட மக்கள் விரோத கொள்கை கள், நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி ஊழி யர்கள் பிரச்சாரம் செய்த னர். மாநில அரசு நிறை வேற்ற வேண்டிய தேர்தல் வாக்குறுதிகள், குடிமனைப்பட்டா, காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், காவல்துறை யினர் வன்முறை-ஜனநாயக விரோத போக்கு, சாதி ஆணவப்படுகொலையை தடுக்க சட்டம் கொண்டுவர வற்புறுத்தியும் ஊழியர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் 130க்கும் மேற்பட்ட கிளை களில் 200க்கும் மேற்பட்டக் குழுக்கள் இந்த கிளர்ச்சி பிரச்சாரத்தில் ஈடுபட்டன. இவற்றில் அரசியல் தலை மைக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், அகில இந்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செய லாளர் பெ.சண்முகம், மத்தியக் குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், கே.சாமு வேல்ராஜ், என்.பாண்டி, டி.ரவீந்திரன், கே.சுவாமி நாதன், எஸ்.முத்துக் கண்ணன், மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் கே.வனஜகுமாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.