ரூ.2.33 கோடி மதிப்பிலான வைர கற்கள் பறிமுதல்
சென்னை,பிப்.9- சென்னை விமான நிலையத்தில் தாய் லாந்துக்கு கடத்த இருந்த ரூ.2.33 கோடி மதிப்புள்ள வைர கற்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை (பிப்.9) வந்த பயணி களை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சென்னையைச் சேர்ந்த பயணி ஒருவர் கொண்டு வந்த சூட்கேசில் வைரக் கற்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனே அவற்றை பறிமுதல் செய்த சுங்கத் துறை அதிகாரிகள் இது தொடர்பாக அந்த வாலிபரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய் யப்பட்ட வைர கற்களின் மதிப்பு ரூ.2.33 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏ.ஐ தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானது: அமைச்சர் தகவல்
சென்னை,பிப்.9- மொழி உணர்வில் தமிழ்நாடு எப்போதும் சிறந்து விளங்கும் மாநில மாக உள்ளது என அமைச்சர் பழனி வேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் பன்னாட்டு கணித்தமிழ் மாநாட்டை தகவல் தொழில்நுட்பத் துறை-சேவை கள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மொழியின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
கணித்தமிழ் வளர்ச்சியில் காலஞ்சென்ற முதல்வர் கருணாநிதி பெரும் முன்னெடுப்பை செய்தவர் என்றும் அவர் தெரிவித்தார். வளர்ந்து வரும் தொழில் நுட்பங்களில் தமிழின் நிலை குறித்து ஆராய்தல், விவாதித்தல், புதிய சிந்தனைகளை உருவாக்குதல், இளம் திறமைகளை அடையாளம் காணுதல் உள்ளிட்ட இலக்குகளை அடைவதற் காக பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு மூன்று நாள்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இம்மாநாட்டில் மொழித் தொழில் நுட்பங்கள் தொடர்பான முப்பதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீன தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதி பலிக்கும் விதமாக 40 காட்சி அரங்கு கள் அமைக்கப்பட்டிருந்தன.