சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகள் விவேக் குமார் சிங் மற்றும் எம்.சுதீர் குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த விவேக் குமார் சிங் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எம்.சுதீர் குமார் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இதன் மூலம் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் 9 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.