tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மேலும் 2 காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிப்பு
சென்னை, மார்ச் 25- மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் திருநெல்வேலி தொகு தியில் ராபர்ட் புரூஸ் வேட்பாளராக அறி விக்கப்பட்டுள்ளார். மேலும், விளவங் கோடு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் டாக்டர் தாரகை கத்பர்ட் காங்கி ரஸ் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப்  பட்டுள்ளார். மயிலாடுதுறை மக்கள வைத் தொகுதிக்கான வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

பம்பரம் சின்னம்: இன்று விசாரணை
சென்னை, மார்ச் 25- மக்களவைத் தேர்  தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணை  யத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  சார்பில் அவசர முறையீடு வழக்கு தொட ரப்பட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல்  செய்ய இன்னும் ஒரு சில நாட்களே உள்ள  நிலையில், தங்களது கோரிக்கையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை என அதில் தெரிவித்துள்ளார். இந்த அவ சர முறையீட்டு மனு செவ்வாய்க்கிழமை (மார்ச் 26) தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வருகிறது.

அதிமுக எம்எல்ஏ தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை
உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை, மார்ச் 25- கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிருஷ்ண கிரி தொகுதியில் திமுக  சார்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் 794 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வின் அசோக்குமாரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

இதையடுத்து, சென்னை உயர் நீதி மன்றத்தில் செங்குட்டுவன் வழக்கு தொடர்ந்திருந்தார். நீதிபதி பி.டி. ஆஷா  முன்பு வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, நிராகரிக்கப்பட்ட 605 தபால்  வாக்குகளை உயர் நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண் ணிக்கை நடத்த வேண்டும் என்ற திமுக தரப்பு வாதத்தை ஏற்றுக்கொண்டு ஒரு  பதிவாளரை நியமிக்க நீதிபதி ஆஷா  உத்தரவிட்டார். மேலும், இந்த நட வடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.