tamilnadu

img

சாலை மீடியனில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் பலி  

செங்கல்பட்டு அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று சாலை மீடியனில் இருந்த மரத்தில் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.  

சென்னையை சேர்ந்த மருத்துவரான ஹிமவர்ஷன் என்பவர் தனது தாய் பாரதி ரெட்டியுடன் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி மகேந்திரா தார் ரக காரில் சென்று கொண்டிருந்தனர்.  அப்போது பழவேலி என்ற பகுதியில் ஸ்கோடா ரேபிட் கார் ஒன்று அவர்களை முந்த முயன்றதாக கூறப்படுகிறது. அதனால் ஓரமாக செல்ல முயன்ற மகேந்திரா தார் ரக கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையின் மீடியனில் இருந்த மரத்தில் வேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஹிமவர்ஷன் மற்றும் அவரது தாய் பாரதி ரெட்டியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்து நிகழ்ந்த சமயத்தில் மருத்துவரின் கார் அவ்வழியே வந்த மாருதி ஸ்விப்ட் ரக காரின் மீது லேசாக மோதியதில், அந்த காரின் முன்பகுதி சேதமடைந்தது.  

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு தாலுகா போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதனைதொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;