tamilnadu

img

சென்னை மெரினா கடலில் மூழ்கி 2 சிறுவர்கள் உயிரிழப்பு  

சென்னை மெரினா கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி சகோதரர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை அருகே திருநின்றவூரைச் சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 9 பேர் மெரினா கடற்கரைக்கு சனிக்கிழமை(பிப்.26) இன்று காலை வந்தனர். அதில் சுதேசிநகர் காவேரி நகர் தெருவைச் சேர்ந்த அணில் மகன்கள் ஹரிஷ்(8) மற்றும் ஆகாஷ்(10) ஆகிய இருவரும் கடற்கரையில் குளித்து விளையாடி உள்ளனர். அப்போது ராட்சத அலையில் சிக்கி சகோதரர்கள் இருவரும் உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்புப்படையினர் இருவரையும் மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

;