17 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு சனிக்கிழமை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், அம்பத்தூர் துணை ஆணையராக பணியாற்றி வந்த மகேஷ், ஆவடி சட்டம் மற்றும் ஒழுங்கு காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அடையாறு காவல் ஆணையராக மகேந்திரனும், தாம்பரம் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராக சிபி சக்கரவர்த்தியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் தாம்பரம் காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ஆவடி காவல் தலைமையகம் மற்றும் நிர்வாகப் பிரிவு துணை ஆணையராக உமையாள் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல் மொத்தம் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புதியதாக உருவாக்கப்பட்ட தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகங்களுக்கு 8 துணை ஆணையர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து, சட்டம் ஒழுங்கு, கிரைம் பிரிவு, நிர்வாகம் என தலா 4 துணை ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.