சென்னை, மார்ச் 3- தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழகங்களுக்கு 17 விருதுகள் கிடைத்துள்ளன என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பெருமிதத்துடன் தெரிவித் துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள அறிக்கை வருமாறு:
ஒன்றிய அரசின் சாலை போக்குவரத்து- நெடுஞ் சாலைத்துறையின் அனைத்து இந்திய மாநில சாலை போக்குவரத்து கழகங்க ளின் கூட்டமைப்பு இயங்கி வருகிறது. இந்த கூட்ட மைப்பு ஆண்டுதோறும் அனைத்து மாநில போக்கு வரத்து கழகங்களை ஊக்கு விக்கும் வகையில் அவற் றின் செயல்திறன்களை ஆய்வு செய்து விருதுகள் வழங்கி வருகிறது.
அதன் அடிப்படை யில் தமிழ்நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழ கங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து விருதுகள் பெற்று வருகின்றன. தற்போது முத லமைச்சரின் அறிவுறுத்தல் படியும், எனது வழிகாட்டுதல் படியும் போக்குவரத்துத் துறை சிறந்த முறையில் பணி யாற்றியது.
இதன் பயனாக அனைத்து இந்திய மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்களின் கூட்டமைப்பு மூலமாக வழங்கப்படும் 2022- 23 ஆம் ஆண்டுக்கான தேசிய பொது பேருந்து போக்கு வரத்து சிறப்பு விருதுகளில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகங்கள் 17 விருது களுக்கு தேர்வாகியுள்ளது. மொத்தமாக வழங்கப்படும் விருதுகளில் 25 விழுக்காடு விருதுகளை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் பெற்றுள்ளன. முதல் பரிசுக்கான 38 பிரிவுகளில் 9 பிரிவுகளிலும், இரண்டாம் பரிசுக்கான 31 பிரிவுகளில் 8 பிரிவுகளிலும் ஆக மொத்தம் 69-இல் 17 பிரிவுகளில் பரிசு பெறுவ தற்கு தேர்வாகியுள்ளது. இது மொத்த விருதுகளில் நான்கில் ஒரு பங்காகும்.
மதுரைக்கு 6 விருதுகள்
பேருந்துகளின் எரி பொருள் திறன், சாலை பாது காப்பு, டயர் செயற்திறன் (கிராமப்புறம், நகர்ப் புறம்), வாகன பயன்பாடு (கிராமப்புறம், நகர்ப்புறம்) ஆகியவற்றின் அடிப்படை யில், தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகத்தின் மதுரை 6 விருதுகளுக்கும், கும்ப கோணம் 5 விருதுகளுக்கும், அரசு விரைவு போக்கு வரத்து கழகம் 3 விருதுகளுக் கும், சேலம் 2 விருதுகளுக் கும் தேர்வாகி உள்ளன.
ஏ.எஸ்.ஆர்.டி.யு. தள்ளு படி விலையில் அதிக பொருட் கள் கொள்முதல் செய்த தற்காக முதல் இடத்துக்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் விழுப்புரம் ஒரு விருதும் பெற்றிட தேர் வாகி உள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.