சென்னை, மார்ச் 25- மக்களவைத் தேர்தலை யொட்டி தமிழ்நாட்டிற்கு 165 கம் பெனி துணை ராணுவப்படை வருகை தர உள்ளது என்று சத்ய பிரதா சாகு தெரிவித்தார்.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலை மைச் செயலகத்தில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
453 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி அட்டை
மக்களவைத் தேர்தலுக்கான ‘சி விஜில் செயலி’ மூலம் தமிழ் நாட்டில் இதுவரை 11,305 புகார்கள் பெறப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 32 துப்பாக்கிகளை சம்பந்தப்பட்ட வர்கள் போலீசில் சமர்ப்பித்துள்ள னர். இதுவரை 453 நட்சத்திரப் பேச் சாளர்களுக்கு அனுமதி அட்டை வழங்கப்பட்டுள்ளது. வாக்காளர் களிடம் இருந்து 17 ஆயிரத்து 800 புகார்கள் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துள்ளன.
தமிழகத்திற்கு கூடுதலாக 165 கம்பெனி துணை ராணுவப் படை யினர் வருகை தர உள்ளனர். மொத் தமாக தமிழ்நாட்டில் 190 கம்பெனி துணை ராணுவப் படையினர் தேர் தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
மதிமுக, விடுதலைச் சிறுத்தை கள், புதிய தமிழகம் கட்சிக்கு இன் னும் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. வாக்காளர்களுக்கு விநி யோகம் செய்ய கையேடு தயா ரிக்கப்பட்டுள்ளது. இதனை, இந்த மாத இறுதியில் இருந்து வீடு, வீடாக விநியோகம் செய்ய ஏற்பாடு செய் துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.