tamilnadu

img

நடப்பாண்டில் 1529 ஏரிகள் தூர்வாரப்படும் : முதலமைச்சர்

சென்னை:
நடப்பாண்டில் ஆயிரத்து 529 ஏரிகளில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.சட்டப்பேரவையில் திங்களன்று (ஜூலை 8) உள்ளாட்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் குடி மராமத்து பணிகள் குறித்து பணிகள் குறித்து பேசினார்.அதற்கு பதிலளித்த முதலமைச்சர், குடிமராமத்து பணிகள் முழுமையாக பாசன வசதி பெறும் விவசாயிகளைக் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. பணிகளைக் கண்காணிக்க பாலாஜி ஐஏஎஸ் நியமிக்கப் பட்டுள்ளார். மேலும், மாவட்ட ஆட்சியாளர்களும்  நேடியாக பணிகளைக் கவனிக்கஉத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்திற் கான பணம் காசோலையாக தரப்படுகிறது என்றார்.

விபரீத யோசனை
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற விவாதம் வருமாறு:நந்தகுமார் (திமுக): பசுமை வீடு கட்டும் திட்டத்தில் ஒரு வீட்டிற்கு 2. 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது. அதில் 30 ஆயிரம்ரூபாய் சூரிய மின்சக்தி சாதனங்களுக்கு போக மீதமுள்ள 1.80 லட்சம் ரூபாயை கொண்டு எப்படி வீடு கட்ட முடியும்? குறைந்தது 4 லட்சம் ரூபாய் இருந்தால்தான் வீடு கட்ட முடியும். எனவே,  இத்திட்டத்திற்கான நிதியைஅதிகரிக்க வேண்டும் அல்லது கான்ட்ராக்ட் காரர்களிடம் விட்டு கட்ட வேண்டும்.உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: பயனாளிகள் வீடு கட்ட சிறிதளவு பணம் செலவிட வேண்டி இருப்பது உண்மைதான்.  1.80 லட்சம் ரூபாய்க்கு வீடு கட்டிக் கொடுக்க ஒப்பந்ததாரர்கள் முன்வந்தால் கான்ட்ராக்ட் விட தயாராக இருக்கிறோம்.

நந்தகுமார்: குடிநீர் வடிகால்வாரியத்தில் 50 விழுக்காடு இடங்கள் காலியாக உள்ளன.காலியாக உள்ள நகராட்சி ஆணையர், பேரூ ராட்சி செயல் அலுவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தூய்மை காவலர்கள் ஊதியத்தை மாற்றி அமைக்க வேண்டும்.அமைச்சர்: 65ஆயிரம் தூய்மை பணி யாளர்கள் ஊதிய உயர்வு குறித்து முதலமைச் சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.

உள்ளாட்சித் தேர்தல்
விஜயதாரணி (காங்): உள்ளாட்சித்  தேர்தல் எப்போது நடத்தப்படும்?32 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 200 வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் அதற்கான அறிவிப்பை வெளியிடும்.