tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

தமிழக - புதுச்சேரி மீனவர்கள் 15 பேர் கைது
 நாகப்பட்டினம், மார்ச் 15- இந்திய எல்லை யைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி புதுச் சேரி மாநிலம் காரைக் கால், தமிழகத்தில் நாகப்பட்டினம் மாவட் டங்களைச் சேர்ந்த 15 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் வெள்ளிக் கிழமை அதிகாலை கைது செய்தனர். மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இலங்கை காங்கேசன் நகர் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப் பட்டனர்.

தமிழகத்தில் புதிதாக  4 மாநகராட்சிகள்
சென்னை,மார்ச் 15 - தமிழ்நாட்டில் தற் போது சென்னை, கோவை, மதுரை, ஆவடி, ஓசூர், சேலம், திருச்சிராப்பள்ளி, திரு நெல்வேலி, வேலூர், திண்டுக்கல், நாகர்கோ வில், தஞ்சாவூர், ஈரோடு, தூத்துக்குடி, திருப்பூர் என 15 மாநகராட்சிகள் உள்ளன. இந்நிலையில், புதுக்கோட்டை, திருவண் ணாமலை, நாமக்கல், காரைக்குடி ஆகிய நான்கு நகராட்சிகளை விரிவாக் கம் செய்து மாநகராட்சிகளாக மாற்றுவ தற்கான பணிகளை தொடங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

நவாஸ் கனி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை
சென்னை,மார்ச் 15- முஸ்லீம் லீக் கட்சியின் இராமநாதபுரம் தொ குதி எம்.பி. மற்றும் தற் போது அதே தொகுதி யில் மீண்டும் வேட்பாள ராக போட்டியிடுபவர் நவாஸ் கனி. இவருக் குச் சொந்தமான- சென்னை யிலுள்ள எஸ்.டி. கூரியர் நிறுவனங்க ளில் ஒன்றிய அரசின் அமலாக்கத்துறை வியாழனன்று சோதனை நடத்தியது. இந்த சோதனை வெள்ளிக்கிழமை யன்றும் 2ஆம் நாளாக தொடர்ந்தது.

எஸ்.டி. கூரியர்ஸ், தனது அண்ணலார் கல்வி அறக்கட்டளையின் மூலம், படிக்க ஆர்வம் இருந்தும் பொருளாதார நெருக் கடியால் சிரமப்படும் ஏழை மாணவர்களு க்கு ஆண்டுதோறும் கல்வி உதவித் தொகை  ழங்குவதோடு படிப்பில் முதல் மூன்று இடம் பெறுபவர்களுக்கு ஊக்கத் தொகை யும் வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

நடந்தாலும், ஓடினாலும், உருண்டாலும் மோடிக்கு தமிழகத்தில் வாய்ப்பில்லை 
  சென்னை,மார்ச் 15- பிரதமர் மோடி நீருக்கடியில் நீந்தினாலும், தரையில் நடந்தாலும், வான் மார்க்கமாக வந்தா லும், நடந்தாலும், ஓடினாலும், உருண்டாலும் தமிழகத்தில் பாஜக-வெற்றி பெறாது என்றார் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு.

திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தேர் தல் காலத்தில் வழங்கப்பட்ட நிதியில் வெளிப்ப டைத் தன்மை உள்ளது. யாரையும் அச்சுறுத்தி யோ, மிரட்டியோ பெறப்படவில்லை. ஆனால், பாஜக பெற்ற நிதியின் கால அளவைப் பார்க்க  வேண்டும். அந்த நேரங்களில் பாஜக-வின் தோ ழமை அமைப்புக்கள் இடி, ஐடி, சிபிஐ சோதனை நடத்தியிருப்பார்கள். எனவே பாஜக பெற்ற நிதிக்கும் திமுக பெற்ற நிதிக்கும் வித்தியாசம் உள்ளது என்றார்.

இரட்டை இலை வழக்கில் இன்று உத்தரவு
புதுதில்லி, மார்ச் 15- இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் தில்லி உயர்நீதிமன்றம் இன்று (மார்ச் 16) உத்தரவு பிறப்பிக்கிறது.

இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இன்று (சனிக்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப் படும் என்று தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி சச்சின் தத்தா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகார்கள் குறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வில்லை என புகழேந்தி வழக்குத் தொடர்ந்திருந்தார்.