tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

11 ஆம் வகுப்புக்கு தமிழ்  இலக்கிய திறனறித் தேர்வு

சென்னை, செப்.4- தமிழ்நாட்டில், 11 ஆம் வகுப்பு மாண வர்களுக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு அக்டோபர் 19 ஆம் தேதி நடைபெறு கிறது. இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள்  இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளி மாணவர்கள் தமிழ் மொழி இலக்கிய திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு நடத்தப் பட்டு வருகிறது. அந்த வகையில், நடப்பா ண்டில், ஆகஸ்ட் 19 அன்று தேர்வு நடை பெறுகிறது.

இந்த தேர்வில், 1,500 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறை மூலம் மாதம் ரூ.1,500 இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படும். இந்த தேர்வில், 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும், மீதமுள்ள 50  விழுக் காடு அரசு உதவிபெறும் பள்ளி  மாண வர்கள் உட்பட பிற தனியார் பள்ளிமாண வர்களும் தேர்வு செய்யப்படு வார்கள்.

தமிழக அரசின் 10 ஆம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலை நகரங்களில் இந்த தேர்வு நடத்தப்படும்.

தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள், www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் செப்டம்பர் 5 முதல் 19 ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதி விறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து ரூ.50 விண்ணப்ப கட்டணத்துடன் பள்ளி தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண் டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

குரூப்-4 தேர்வு முடிவு அடுத்த மாதம் வெளியீடு 

சென்னை, செப்.4- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் (டிஎன்பிஎஸ்சி), தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள பணி யிடங்களை குரூப்-1, குரூப்-2 மற்றும் குரூப்-4 ஆகிய போட்டித் தேர்வுகள் வாயிலாக நிரப்பி வருகிறது.

அந்த வகையில், கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ), இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை செயல் பணியாளர், ஆய்வக உதவியாளர், வரி தண்டலர், வனக்காப்பா ளர், நேர்முக உதவியாளர் உட்பட பல்வேறு பதவிகள் அடங்கிய குரூப்-4 பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை, தமிழகம் முழுவதும் 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 தேர்வர்கள் எழுதினர்.இதற்கான தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

இந்த நிலையில், குரூப்-4 தேர்வுக் கான முடிவுகள் அடுத்த மாதம் (அக்டோ பர்) வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இதற்கான, அறிவிப்பை ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.