ராயநல்லூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும், விவசாய கூலி தொழிலாளர் குடும்பத்திற்கு மாதம் 7,500 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என் வலியுறுத்தி செவ்வாயன்று (மே 13) காட்டுமன்னார்கோவில் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழு உறுப்பினர் பிரகாஷ் தலைமை தாங்கினார்.