‘தேர்தல் பாதுகாப்பில் 1.5 லட்சம் போலீசார்’
சென்னை, மார்ச் 19- ஏப்ரல் 19 அன்று நடைபெறும் மக்கள வைத் தேர்தலை யொட்டி, தமிழ்நாட்டில் 39 மக்களவை தொகு திகளிலும் 200 கம் பெனி துணை ராணுவ படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இது தவிர மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரம் போலீசாரும் பாதுகாப்புப் பணி யில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர் களில் சென்னையில் மட்டும் 15 ஆயி ரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடு படுத்தப்பட்டு உள்ளனர் என்று தமிழ்நாடு காவல்துறை தலைவர் (டிஜிபி) சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
தமிழிசை ராஜினாமா ஏற்பு
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு
கூடுதல் பொறுப்பு
புதுதில்லி, மார்ச் 19- தமிழிசை சவுந்தர ராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ண னுக்கு தெலுங்கானா ஆளுநராகவும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் கூடுதல் பொறுப்பு வழங்கி குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.
தமிழிசை சவுந்தரராஜனின் ராஜி னாமாவை குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டதாகவும், மேலும், வழக்கமான ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, ஜார்க் கண்ட் ஆளுநராக உள்ள சி.பி. ராதா கிருஷ்ணன், தெலுங்கானா ஆளுநராக வும், புதுச்சேரி துணைநிலை ஆளுநராக வும் கூடுதலாக பொறுப்புகளை கவனிப் பார் என குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
தேர்தல் விதிமுறை மீறல்: பிரேமலதா மீது வழக்கு
சென்னை, மார்ச் 19- மக்களவைத் தேர் தல் தேதி அறிவிக்கப் பட்டதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி கள் அமலுக்கு வந்துள் ளன. இந்நிலையில், தேமுதிக அலுவல கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்த தாக எழுந்த புகாரின் பேரில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜய காந்த், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காளிராஜ் ஆகியோர் மீது கோயம்பேடு காவல்நிலை யத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.