tamilnadu

img

தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள்...  தென் கொரியாவில் இருந்து வந்தது... 

சென்னை
மனிதனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை எளிதாக உறுதி செய்வது பிசிஆர் எனப்படும் கிட் கருவிகள் தான். இந்த கருவியின் மூலம் தமிழக அரசு கொரோனா பரிசோதனை செய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் பரிசோதனையை அதிகமாக்கியது. இதனால் பிசிஆர் கருவிகளின் இருப்பு குறைந்தது. இதனால் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்க முடியாத சூழலும் உருவாகியது.

இந்நிலையில் தென்கொரிய நிறுவனத்திடம் இருந்து ஆர்டர் செய்த மேலும் 1 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன.  இந்த கருவிகளை பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி அங்கு கொரோனா பரிசோதனையை தீவிரப்படுத்த தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது.

;