tamilnadu

img

‘வைக்கம் போராட்டம்’ இன்று நூற்றாண்டு சிறப்பு விழா

சென்னை,டிச.27- இந்திய சமூகநீதிப் போரில் முதல் களமான வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா சென்னை வர்த்தக மையத்தில் வியாழனன்று (டிச.28) நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

கேரள மாநிலம் வைக்கத்தில் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள தெருக்களில் தாழ்த்தப் பட்டவர்கள் நடந்து செல்வதற்கு ‘தடை விதிக்கப் பட்டிருந்தது’. இதை எதிர்த்து 1924 ஆம் ஆண்டு அங்கு மிகப்பெரிய போராட்டம் நடைபெற்றது. 

இந்தப் போராட்டத்தில் தலைவர்கள் அனை வரும் கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டம் தொடர்ந்து நடைபெற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது, கேரள போராட்டத் தலைவர்கள் தந்தை பெரியாருக்கு கடிதம் எழுதி, இந்தப் போராட்டத்திற்கு நீங்கள் வந்து உயிர் கொடுக்க வேண்டும் என்றனர்.

அதையடுத்து அங்கு சென்று தந்தை பெரியார் நடத்திய போராட்டம் மகத்தான வெற்றி யில் முடிந்து ‘வைக்கம் வீரர்’ என்று அழைக்கப் பட்டார். இந்த போராட்ட வெற்றியின் 100 ஆம் ஆண்டினை குறிக்கும் வகையில் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன்படி, வைக்கம் போராட்டம் நூற்றாண்டு சிறப்பு விழா டிச.28 அன்று காலை 11.15 மணிக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடைபெறுகிறது. இந்த விழாவுக்கு தலைமை ஏற்கும் தமிழ்நாடு முத லமைச்சர் மு.க.ஸ்டாலின், நூற்றாண்டு விழா மலரை வெளியிட்டு உரையாற்றுகிறார். இந்த  விழாவில் கலந்து கொள்ளும் கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், “பெரியாரும் வைக்கம் போராட்டமும்” என்ற நூலை வெளி யிட்டு உரையாற்றுகிறார். திராவிடர் கழகத் தலை வர் கி. வீரமணி, அமைச்சர்கள், தலைமைச் செய லாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரி கள் பலரும் கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில், செய்தி மக்கள் தொடர்புத் துறை தயாரித்துள்ள ‘வைக்கம் போராட்டம்’ குறித்த ஆவணப்படம் திரையிடப்படுகிறது. மேலும், பள்ளி மாணவர்கள் சார்பில் சமத்துவ கொண்டாட்டம் நடைபெறுகிறது.