திருப்போரூரில் எம்.ஜி.ஆர் சிலைக்கு காவி துண்டு அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சி பேருந்து நிலையம் எதிரே அமைந்துள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு, அடையாளம் தெரியாத நபர்கள் காவி துண்டு அணிவித்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைக் கண்டித்து, ஆ.தி.மு.க-வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.