tamilnadu

img

செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பிரதீப் பணியிடை நீக்கம்!

செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெருங்கரணை கிராமத்தை சேர்ந்த வசந்தா, செல்வம், மாரியப்பன் மற்றும் பேரம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த வள்ளியப்பன், சந்திரா ஆகியோர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உடல்நலம் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 5 பேர் கள்ளச்சாராயம் அருந்தியதால் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பிரதீப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், மேல்மருவத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் பிரேம் ஆனந்த், சித்தாமூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் மோகனசுந்தரம், மற்றும் மதுராந்தகம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆய்வாளர் துரைபாண்டியன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கள்ளச்சாராயம் விற்பனை செய்த குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.