இந்திய பிரதமர்-ரஷ்ய ஜனாதிபதி ஒப்பந்தம்
விளாடிவோஸ்டாக் (ரஷ்யா), செப்.4- ரஷ்யா நாட்டிற்குச் சென்றுள்ள பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினுக்கும் இடையே சென்னை – விளாடிவோஸ்டாக் இடையே கடல்வழியில் கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதற் கான ஒப்பந்தம் கையெழுத்தாகி யுள்ளது. ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கும், ரஷ்ய ஜனாதிபதி புடி னுக்கும் இடையே புதனன்று நடைபெற்ற பேச்சுவார்த்தை களின்போது பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதங்கள் மேற்கொள்ளப் பட்டன. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், முதலீடு, எண்ணெய் மற்றும் எரிவாயு, அணு எரிசக்தி, பாதுகாப்பு, விண்வெளி மற்றும் கடல்வழி மார்க்கங்களில் தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்று பல துறைகள் குறித்தும் விவாதங்கள் நடைபெற்றன.
இரண்டு நாள் பயணமாக ரஷ்யா வந்துள்ள பிரதமர் மோடி, ரஷ்யாவில் நடைபெறும் கிழக்கத்திய பொருளாதார அமைப்பின் மாநாட்டி லும் (EEF-Eastern Economic Forum) பங்கேற்கிறார். புடினைச் சந்தித்தபின் இரு வரும் இணைந்து வெளிட்டுள்ள பத்தி ரிகைச் செய்தியில், “எந்த நாட்டின் உள்நாட்டு விவகாரங்களிலும் வெளி யார் செல்வாக்கு செலுத்துவதற்கு எதிராக இருக்கிறோம்” என்று குறிப் பிடப்பட்டிருந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்ற நிலையின் பின்னணியில் இவ்வாறு இவ்விரு தலைவர்களும் கூறியுள்ளனர். பிரதமர் மோடி மேலும் கூறுகை யில், சென்னைக்கும் ரஷ்ய நாட்டி லுள்ள விளாடிவோஸ்டாக் நகரத் திற்கும் இடையே கடல்வழி மார்க்கத் தில் முழுமையான அளவில் கப்பல் போக்குவரத்து மேற்கொள்ள முன் மொழிவு ஒன்று ஏற்படுத்தப்பட்டி ருப்பதாகவும், அதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாகவும் கூறினார்.
இந்தியா – ரஷ்யா இடையே யான ஒத்துழைப்பு இரு நாடுகளின் தலைநகர்களுடன் மட்டும் நின்று விடாது. மாறாக இரு நாட்டு மக்களின் இடையேயும் உண்மையான முறை யில் இந்த நட்புறவினை எடுத்துச் செல்ல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றும் மோடி கூறினார். இந்திய விண்வெளி விஞ்ஞானி களுக்கு, ககன்யான் திட்டத்தின் மூலம் மனிதர்களை விண்ணில் செலுத்துவதற்கு ரஷ்யா பயிற்சி அளித்திடும் என்று ரஷ்யத் தரப்பில் கூறப்பட்டது. இரு நாடு களுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி யுள்ளன.
“இரு நாடுகளுக்கும் இடையே மிக வேகமான முறையில் நட்புற வும் ஒத்துழைப்பும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. இரு நாடு களுக்கு இடையில் மட்டுமல்ல இரு நாட்டு மக்களின் வளர்ச்சிக்கும் இது பயன்படுத்தப்படும். இரு நாடு களுக்கும் இடையே அளவில் மட்டு மல்ல, குணத்திலும் நல்ல முறை யில் முன்னேற்றம் ஏற்படக்கூடிய விதத்தில் எங்கள் நட்புறவை புதிய மட்டத்திற்கு எடுத்துச்சென்றிருக் கிறோம்” என்று மோடி கூறினார். இந்தியாவுடனான நட்புறவு குறித்து புடின் கூறுகையில், ரஷ்யா வின் மிக முக்கியமான கூட்டாளி களில் ஒன்றாக இந்தியா இருந்து வரு கிறது. இருநாடுகளுக்கும் இடையே யான உறவு என்பது போர்த்தந்திர ரீதியிலும், சிறப்பு முக்கியத்துவம் உடையது. இந்தியாவிற்கு எரிசக்தி யை விநியோகிக்கும் நாடுகளில் ரஷ்யா மிகவும் நம்பகமான நாடாக இருந்து வந்திருக்கிறது. கடந்த ஆண்டில் இந்தியாவுக்கு 3.3 மில்லி யன் டன் எண்ணெய் அனுப்பி வைத்த தாகவும், அதேபோன்று எண்ணெய் பொருள்கள் 550 ஆயிரம் டன்களும், நிலக்கரி 4.5 மில்லியன் டன்களும் அனுப்பி வைத்தது என்று கூறி னார். கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து புடின் கூறுகையில், முதல் இரு பிரிவுகள் ஏற்கனவே செயல் படத் துவங்கிவிட்டன. மூன்றாவது மற்றும் நான்காவது பிரிவுகளும் திட்ட மிட்டபடி செயல்படத் துவங்கும். நாம் இருவரும் மிகவும் வெற்றி கரமான முறையில் இதுநாடு களுக்கும் இடையே ராணுவம் மற் றும் தொழில்நுட்ப ஒத்துழை ப்பை 2020 வரையிலும் அமல்படுத்திடு வோம். இதனை மேலும் பத்தாண்டு களுக்கு மேம்படுத்திடக்கூடிய விதத்திலும் திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கிறோம் என்றும் கூறி னார்.
(ந.நி.)