சீனாவில் பேஷியல் பேமெண்ட் என்ற புதிய தொழில்நுட்பம் மூலம் பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
பணத்தை கையில் வைத்துக் கொண்டு கடைகளில் வங்கும் பொருட்களுக்கு செலுத்தும் காலம் போய் டெபிட், கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் முறை பயன்பாட்டுக்கு வந்தன. இதை அடுத்து, ஆன்லைன் பேமெண்ட் முறைகளான பேடிஎம், கூகுள் பே என ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு முறையில் பணம் செலுத்த வழிகள் தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவற்றையெல்லாம் கடந்து தற்போது, சீனாவில் பேஷியல் பேமெண்ட் தொழில்நுட்பம் (facial payment technology) மூலம் பணம் செலுத்தும் முறை பிரபலமாகி வருகிறது.
இந்த தொழில்நுட்பத்தில், தேவையான பொருளை வாங்கிவிட்டு கடைகளில் இருக்கும் பிஓஎஸ் (POS) இயந்திரத்தின் முன்னால் நின்றாலே போதும் அதிலிருக்கும் கேமரா உங்களின் முகத்தை ஆராய்ந்து வங்கிக் கணக்கில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிட்டு சரிபார்த்து, பணத்தை உங்களின் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளும். இந்த முறையில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையிலும், சீனாவில் இந்த முறையை பலரும் ஆர்வத்துடன் பயன்படுத்தி வருகின்றனர்.