tamilnadu

img

சீனா தொழிற்சாலையில் தீ விபத்து -19 பேர் பலி

சீனா தொழிற்சாலை ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 19 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
சீனாவின் கிழக்குப்பகுதியில் உள்ளது நிங்காய் கவுண்டி. இங்குள்ள தொழிற்பூங்காவில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று மதியம் எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது. ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடித்து எரியத் தொடங்கியதும் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறினர். ஆனால், தீ வேகமாகப் பரவியதால், சிலர் தீயில் சிக்கிக் கொண்டனர்.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த விபத்தில் 19 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் 
ஏற்பட்டது. இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.