tamilnadu

img

ஆஸ்திரேலியா காட்டுத்தீ: 113  விலங்கினங்கள் அழியும் அபாயம்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ காட்டுத்தீயால் 113 விலங்குகள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 
ஆஸ்திரேலியாவில் கோடைக் காலத்தில் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் சுமார்6 மில்லியன் ஹெக்டேர் வரை காட்டுத் தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீயில் சுமார் 100 கோடி விலங்குகள் வரை அழிந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். இந்த காட்டுத்தீயின் பாதிப்பினால் விலங்குகள் 30 சதவீதம் அளவிற்கு தங்களின் இருப்பிடங்களை இழந்துள்ளன. தற்போதைய சூழலில் ஆறுதல் தரும் விஷயமாக எந்த விலங்கினமும் அழிந்துவிடவில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆனால் சில விலங்குகள் ஏறக்குறைய தங்களின் இருப்பிடத்தை மொத்தமாக இழந்துள்ளதால் அதற்கு உடனடியாக உதவி கிடைக்காவிட்டால் அழிந்துவிடும் அபாயம் உள்ளன.
இந்த தகவல்கள் ஒருபக்கம் வெளியிடப்பட்டாலும், இன்னும் பல பகுதிகள் உள்ளே சென்று ஆய்வு செய்ய ஆபத்தானதாக உள்ளதால் மேலும் பல விரிவான தகவல்கள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.