tamilnadu

திருப்புவனத்தில் வாலிபர், மாணவர் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை:
நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் புதிய கல்விக் கொள்கையை கைவிடக் கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் சார்பாக திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சுரேஷ், மாவட்டச் செயலாளர் தென்னரசு , மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் ராமகிருஷ்ணன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் தண்டியப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

;