tamilnadu

திருப்போரூர் அருகே பெண் கொடூர கொலை

திருப்போரூர், ஜூலை 26 திருப்போரூரை அடுத்த வெண்பேடு மேட்டுத்தெருவில் வசித்து வந்தவர் கெங்கம்  மாள் (வயது 70). இவருக்கு சங்கர், டில்லி  என்ற  2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். மகன் டில்லி ஏற்கனவே இறந்துவிட்ட தால் அவருடைய மனைவியும், மருமகளான பார்வதியுடன் கெங்கம்மாள் வசித்து வந்தார்.  அவருக்கு மற்றொரு மகனான சங்கருடன் பேச்சு வார்த்தை இல்லை என்று கூறப்படு கிறது. வியாழனன்று  காலை கெங்கம்மாள் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை. அவரை  தேடி வந்தனர். இந்த நிலையில் கெங்கம்மாள் அப்பகுதி யில் உள்ள மலைப்பகுதியில் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்  தார். காயார் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். சொத்து பிரச்சனையில் கெங்கம்மாள் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்பது குறித்து போலீசார் விசா ரணை செய்து வருகின்றனர். இது தொடர்பாக  கொலையான கெங்கம்மாளின் மகன் சங்கர்  மற்றும் பேரன் கார்த்திக் ஆகிய இருவரிடமும்  போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.