tamilnadu

img

வலதுசாரி அரசியல் தாக்குதலை வீழ்த்த கம்யூனிஸ்ட் அறிக்கை வழிகாட்டுகிறது!

சிவப்பு புத்தக தினத்தில் கே.தங்கவேல் பேச்சு

திருப்பூர், பிப். 21- உலகில் வலதுசாரி அரசி யல் தாக்குதல் மேலோங்கி வரும் நிலையில் அதை எதிர்கொண்டு முறியடிக்கும் வல்லமை பாட்டாளி வர்க்கத்துக்கே உண்டு என கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வழிகாட்டுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் கூறினார். உலகளாவிய அளவில் கொண்டாடப்பட்ட சிவப் புப் புத்தக தினத்தையொட்டி (பிப்.21) திருப்பூரில் கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது. திருப்பூர், பெரியாண்டி பாளையம், சி.க.புதூர் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கிளை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை புத்துணர்வுடன் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வாசிப்பு இயக்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் கே.தங்க வேல் பங்கேற்று செங் கொடியை ஏற்றி வைத்து கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை யின் வரலாற்று முக்கியத் துவத்தை குறிப்பிட்டு அறி முக உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, 2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இன்னும் நீடித்துக் கொண் டுள்ளது. அதன் தொடர்ச்சி யாக வலதுசாரி அரசியல் உலகெங்கும் மேலோங்கி வருகிறது. இதை முறியடிக்கும் ஆற்றல் பாட்டாளி வர்க்கத் திற்கே உண்டு என்று கூறி னார். தெற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜன் நிகழ் விற்குத் தலைமையேற்று, அறிக்கையின் முதல் அத்தி யாயத்தை வாசித்தார். இதில் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் சி.மூர்த்தி, ஒன்றி யக்குழு உறுப்பினர், இடுவாய் ஊராட்சி மன்றத் தலைவர் கே.கணேசன், மூத்த முது பெரும் தோழர் காளியப்பன் உள்பட கட்சி ஊழியர்கள் 25 பேர் பங்கேற்றனர்.

;